புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா - 2015
வருகை தந்து சிறப்பிக்க விருப்பமுள்ள பதிவர்கள் கீழ்க்காணும் படிவத்தை நிரப்பி அனுப்பி தங்களது வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்.
* Required
Never submit passwords through Google Forms.
ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள், நூல் வெளியீடு, மற்றும் குறும்பட வெளியீடு பற்றிய அனைத்திற்கும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி :- bloggersmeet2015@gmail.com
அப்புறம்... அப்புறமென்ன? நிதியாகவோ, விளம்பர உதவியாகவோ தருவதை அன்புடன் ஏற்போம்... அதுவும் முக்கியம்தானே? விளம்பரம் பற்றிய விவரங்களுக்கு இந்தப் பதிவைப் பார்க்க வேண்டுகிறோம்-
http://bloggersmeet2015.blogspot.in/2015/09/blog-post.html
நிதி மற்றும் விளம்பரம் அனுப்ப வேண்டிய வங்கி விவரங்களுக்கு
இந்தப் பதிவைப் பார்க்கலாம் -
http://bloggersmeet2015.blogspot.in/p/blog-page_29.html
---------------------------------------------
முக்கிய விளக்கம் (1) : விழாவிற்கு வரும் அனைவர்க்கும் தரப்படவுள்ள “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” தயாரிப்பதற்கு அடிப்படைத் தகவல்கள் மேலே படிவத்திலுள்ள "கையேட்டில் வர வேண்டிய பிற குறிப்புகள்" என்பதிலிருந்தே எடுக்க வேண்டி இருப்பதால், அதில் தங்களது புகைப்படத்தின் இணைப்பு அல்லது தளத்தின் லோகோ இணைப்பு, செல்பேசிஎண்(விரும்பினால்), வெளியிட்ட நூல்கள், பெற்ற விருதுகள், தயாரித்த குறும்படங்கள், சிறப்பான
பதிவின் இணைப்பு(கள்) என... சுருக்கமாக : எவை எவை கையேட்டில் வந்தால்
நல்லது என்கிற அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அனைத்துச் சிறப்புகளையும்
தொகுத்துத் தரலாம்... (இடம் கருதி, ஏற்றவற்றை வெளியிட விரும்புகிறது விழாக்குழு)
முக்கிய விளக்கம் (2) : படிவத்தில் குறிப்பிட்டபடி முதல்நாளே வருவோர் தலையணை, போர்வையோடு இரவுத் தங்கவும், மறுநாள் காலை குளிக்கவும் மண்டபத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், தனியாக அறை தேவைப்படுவோர்க்கு -அவரவர் செலவில்- அருகிலுள்ள விடுதியில் ஏற்பாடு செய்ய, விழாக்குழுவினர் உதவி செய்வர். அதுபற்றிய தகவல்களை -எத்தனைபேர் எங்கிருந்து எந்தநேரம் வருகிறார்கள் எனும் தகவலை- முன்கூட்டியே மின்னஞ்சல் வழியே தகவல் தெரிவித்து விடுமாறு முதல்நாள் வருவோரை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முக்கிய விளக்கம் (2) : படிவத்தில் குறிப்பிட்டபடி முதல்நாளே வருவோர் தலையணை, போர்வையோடு இரவுத் தங்கவும், மறுநாள் காலை குளிக்கவும் மண்டபத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், தனியாக அறை தேவைப்படுவோர்க்கு -அவரவர் செலவில்- அருகிலுள்ள விடுதியில் ஏற்பாடு செய்ய, விழாக்குழுவினர் உதவி செய்வர். அதுபற்றிய தகவல்களை -எத்தனைபேர் எங்கிருந்து எந்தநேரம் வருகிறார்கள் எனும் தகவலை- முன்கூட்டியே மின்னஞ்சல் வழியே தகவல் தெரிவித்து விடுமாறு முதல்நாள் வருவோரை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முக்கிய விளக்கம் (3) : இந்தப் படிவத்தை நிரப்பி அனுப்பிய பின்னர் ஒருவேளை கடைசிநேரச் சூழல் காரணமாக விழாவுக்கு வரஇயலாமல் போனாலும், “வலைப்பதிவர் கையேடு” வழியே ஏனைய பதிவர்களின் அறிமுகத்திற்கு இக்குறிப்புகள் உதவும். அதுபோலவே, இப்போது வெளிநாட்டில் இருக்கும் தமிழ்ப்பதிவர்கள் இவ்விழாவுக்கு வந்தால் பெருமகிழ்ச்சியோடு -வரவேற்கிறோம். எனினும் வரமுடியாத நிலை இருக்கிறது என்று உறுதியாகத் தெரிந்தாலும், விழாவை வாழ்த்தி ஒரு கவிதையோ ஒரு 10-15வரியில் ஒரு வாழ்த்துரையோ அனுப்பினால் அதை நம் விழாவிற்கு வரும் அனைவரும் பார்க்கும்படியாக அறிவிப்பும் செய்து, அழகாக பெரிதாக எழுதி வைக்கவும் விழாக்குழு விரும்புகிறது. ஆனால், அவர்கள் அவசியம் “வலைப்பதிவர் கையேடு -2015" க்கான குறிப்புகளை அனுப்பியிருக்க வேண்டும்.
ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள், நூல் வெளியீடு, மற்றும் குறும்பட வெளியீடு பற்றிய அனைத்திற்கும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி :- bloggersmeet2015@gmail.com
அப்புறம்... அப்புறமென்ன? நிதியாகவோ, விளம்பர உதவியாகவோ தருவதை அன்புடன் ஏற்போம்... அதுவும் முக்கியம்தானே? விளம்பரம் பற்றிய விவரங்களுக்கு இந்தப் பதிவைப் பார்க்க வேண்டுகிறோம்-
http://bloggersmeet2015.blogspot.in/2015/09/blog-post.html
நிதி மற்றும் விளம்பரம் அனுப்ப வேண்டிய வங்கி விவரங்களுக்கு
இந்தப் பதிவைப் பார்க்கலாம் -
http://bloggersmeet2015.blogspot.in/p/blog-page_29.html
---------------------------------------------
No comments:
Post a Comment